கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 882 கன அடியாக சரிவு
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு, 882 கன அடியாக சரிந்துள்ளது.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களாக பரவலாக மழை பெய்துள்ளது. இதனால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்தது. இதன் காரணமாக, அணை நீர்மட்டம் கடந்த செப்டம்பர் 22 முதல், 50 அடிக்கு மேல் உள்ளது. நேற்று அணைக்கு, 1086 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 882 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு, இடது மற்றும் வலப்புற வாய்க்கால் மூலம், 177 கனஅடி, சிறிய மதகின் மூலம் தென்பெண்ணை ஆற்றில், 705 கன அடி என, மொத்தம், 882 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் கரையை தொட்டு தண்ணீர் ஓடுகிறது.
கே.பி.ஆர். அணையின் மொத்தம் உயரமான, 52 அடியில், நீர்மட்டம் 51 அடியாகவும், நீர் இருப்பு, 1.55 டி.எம்.சி.,யாக உள்ளது. வடக்கிழக்கு பருவ மழையால், பல மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.