/* */

கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா: 400 காளைகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி அருகே 54ம் ஆண்டு எருது விடும் விழாவில் 400 காளைகள் பங்கேற்றன. 10க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா: 400 காளைகள் பங்கேற்பு
X

வரட்டனப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற 54வது ஆண்டு எருது விடும் விழா.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது விடும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த எருது விடும் விழாவில் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்று பரிசுகளை பெற்று வருகிறது.

அந்த வகையில் இன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஆந்திரா மாநில எல்லையோரம் உள்ள வரட்டனப்பள்ளி கிராமத்தில் 54வது ஆண்டு எருது விடும் விழா நடைபெற்றது. இந்த எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி, பர்கூர், ராயக்கோட்டை, மொரப்பூர், வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ஆலங்காயம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 400 காளைகள் பங்கேற்றது.

ஒவ்வொரு காளைகளாக வாடி வாசலில் இருந்து ஒட விடப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகள் இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் ஒடியது. குறைந்த வினாடியில் 125 மீட்டர் ஒடி இலக்கை எட்டும் காளைக்கு முதல் பரிசாக 70 ஆயிரத்து 770 ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்தடுத்து பரிசாக 50 காளைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை படி, வாடி வாசல் இருந்து ஒடும் வகையில் 12 அடிக்கு இடையை இருபுறமும் அரண்கள் அமைக்கப்பட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு ஒட விடப்பட்டது. காளைகள் மூட்டியதில் 10க்கும் மேற்பட்டவர்கள் லேசான காயம் அடைந்தனர்.

பிரமாண்டமாக நடைபெற்ற இந்த எருது விடும் விழாவை காண கிருஷ்ணகிரி, பர்கூர், ஆந்திரா மாநிலம் குப்பம் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்து கண்டு மகிழ்ந்தனர்.

Updated On: 2 Feb 2022 9:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...