/* */

குளிர்பானம் குடித்த இருவர் ரத்தவாந்தி: கிருஷ்ணகிரி ஆலையில் அதிகாரிகள் சோதனை

திருவள்ளூர் அருகே குளிர்பானங்கள் குடித்த இருவர் ரத்தவாந்தி எடுத்ததால், கிருஷ்ணகிரி ஆலையில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

HIGHLIGHTS

குளிர்பானம் குடித்த இருவர் ரத்தவாந்தி: கிருஷ்ணகிரி ஆலையில் அதிகாரிகள் சோதனை
X

காவேரிப்பட்டணம் அடுத்த சப்பானிப்பட்டியில் உள்ள குளிர்பான ஆலையில் சோதனையிடும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். 

திருவள்ளூர் அருகே கடையில் குளிர்பானங்கள் குடித்த இருவர் நேற்று முன்தினம் திடீரென ரத்தவாந்தி எடுத்ததுடன் மயங்கி விழுந்தனர். அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தநிலையில், குளிர்பானம் தயாரிக்கும் இடம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த சப்பானிப்பட்டி என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடஷ் தலைமையில் நாகேந்திரன், சுரேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் இன்று குளிர்பானம் தயாரிக்கும் ஆலையில் சோதனை செய்தனர். சோதனையில் ஆலையில் தயாரிக்கப்படும் மூன்று வகையான குளிர்பான பாட்டில்களையும் சேகரித்து சென்னை, கிண்டியில் உள்ள அரசு பகுப்பாய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, கிருஷ்ணகிரி மாவட்டம், சப்பானிப்பட்டி அருகே குளிர்பான தயாரிப்பு ஆலை, மற்றும் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள இவர்களது குளிர்பான கம்பெனி மற்றும் அங்கிருந்து அனுப்பப்பட்ட திருவள்ளூர் சுற்று வட்டார பகுதிகளிலும் சோதனை நடந்து வருகிறது.

அப்பகுதிகள் அனைத்திலும் குளிர்பானங்கள் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி முடிவுகள் வரும் வரை குளிர்பான ஆலையில் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Updated On: 21 Sep 2021 4:23 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  9. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!