கிருஷ்ணகிரியில் பனிமூட்டம்- வாகனஓட்டிகள் அவதி
கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு புயல் மற்றும் பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து உள்ளது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி உள்ள நிலையில் தற்போது மழை குறைந்து கடுமையான குளிர் நிலவுகிறது. இன்று கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிகளவில் பனிமூட்டம் காணப்பட்டதால் பொது மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். அதே போல் சாலைகளில் பனி மூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத சூழல் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை பயன்படுத்தியவாறு குறைந்த வேகத்தில் சென்றனர்.மாவட்டம் முழுவதும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடுமையான வெயிலும் 4 மணிக்கு மேல் அதிகாலை வரை கடுமையான குளிரும் நிலவுகிறது. இந்த தட்பவெட்ப நிலை மாற்றத்தால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.