/* */

கிருஷ்ணகிரியில் பனிமூட்டம்- வாகனஓட்டிகள் அவதி

கிருஷ்ணகிரியில் பனிமூட்டம்- வாகனஓட்டிகள் அவதி
X

கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு புயல் மற்றும் பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து உள்ளது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி உள்ள நிலையில் தற்போது மழை குறைந்து கடுமையான குளிர் நிலவுகிறது. இன்று கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிகளவில் பனிமூட்டம் காணப்பட்டதால் பொது மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். அதே போல் சாலைகளில் பனி மூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத சூழல் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை பயன்படுத்தியவாறு குறைந்த வேகத்தில் சென்றனர்.மாவட்டம் முழுவதும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடுமையான வெயிலும் 4 மணிக்கு மேல் அதிகாலை வரை கடுமையான குளிரும் நிலவுகிறது. இந்த தட்பவெட்ப நிலை மாற்றத்தால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

Updated On: 27 Jan 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  3. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  4. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  5. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  6. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  7. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  9. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  10. திருப்பரங்குன்றம்
    கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!