/* */

சிறுமிக்கு பாலியல் தொல்லை : 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.

HIGHLIGHTS

சிறுமிக்கு  பாலியல் தொல்லை : 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
X

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 20 ஆண்டு சிறைதண்டனை பெற்ற சரவணன்.

கரூர் மாவட்டம் உப்பிடமங்களம் பகுதியில் கடந்த 2019 ம் ஆண்டு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய 3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சரவணன் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இச்சம்பவம் குறித்து வெள்ளியணை காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். இது தொடர்பாக சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளி சரவணனுக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

Updated On: 20 Sep 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு