கரூர் மாவட்டத்தில் மழலைகளை வரவேற்க பள்ளிகள் ரெடி
கரூர் மாவட்டத்தில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
HIGHLIGHTS
கரூரில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் தொடங்கும் நிலையில், ஆயத்தப்பணிகளில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டனர்கரு
கரூர் மாவட்டத்தில் ஒன்று முதல் எட்ட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என 1054 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
கொரனா பெருந்தொற்றால் கடந்த 19 மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பள்ளிக் கல்வித் துறை நாளை திறக்க அனுமதி அளித்ததைத் தொடர்ந்து. கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி உள்பட கரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளைக்கு வரும் பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகள் வழங்க ஆசிரியர்கள் அறிவுறுத்த நிலையில் உள்ளனர். மேலும் கதை,பாடல், விளையாட்டு, வரைதல்,வண்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கான ஏற்பாடுகளும் ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். 15 நாட்களுக்கு பிறகு அடுத்து புத்தாக்க பயிற்சி வழங்கவும் ஆசிரியர்கள் திட்டம் தீட்டி உள்ளனர்.