/* */

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு, கரூரில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம்
X

கரூரில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வின் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. 

மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்), கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் தான்தோன்றிமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும், குளித்தலை சார்பு நீதிமன்றத்திலும் நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் இன்று லோக் அதாலத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் தலைமையில் நீதிபதிகள் முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி கோபால் முருகன், கூடுதல் சார்பு நீதிபதி பாரதி, தலைமை குற்றவியல் நீதிபதி ராஜலிங்கம் நீதிபதிகளும் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மோகன் ராம் மற்றும் வழக்கறிஞர்கள் உதவியுடன் சமரசம் செய்ய கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்படி கரூர் , குளித்தலை நீதிமன்றம் - மாவட்ட முதன்மை நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு, காசோலை மோசடி, உரிமையியல், குடும்ப பிரச்சனை, சமரச குற்ற வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, அந்தந்த நீதிமன்றங்களில் சமரசம் செய்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை