எம்.பி. ஜோதிமணி தர்ணா போராட்டம் வாபஸ்
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தை அடுத்து எம்பி ஜோதிமணி போராட்டம் வாபஸ்.
HIGHLIGHTS
கரூர் மாவட்டத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்குவது தொடர்பாக முகாம் நடத்த கோரி மாவட்ட ஆட்சியருக்கு கரூர் ஜோதிமணி பலமுறை வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த முகாம்கள் நடந்து முடிந்துவிட்டது.
எனவே கரூர் மாவட்டத்தில் முகாம் நடத்தினால் மட்டும் திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடந்து முடிந்த மாற்றுத்திறனாளிகள் முகாமிற்கு பங்கு பெற்ற பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க முடியும் என கோரிக்கை வைத்து பலமுறை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடத்தப்படாததைக் கண்டித்து எம்பி ஜோதிமணி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பானது. நேற்று இரவு ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே எம்பி ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரசார் படுத்து உறங்கினர். 24 மணி நேரத்தைத் தொடர்ந்து போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், இன்று கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் முகாமில் அமைக்க ஏற்பாடு செய்ய வழிவகை செய்யவுள்ளோம் என்று உறுதி அளித்ததின் பேரில் எம்பி ஜோதிமணி போராட்டத்தை வாபஸ் பெற்று உள்ளார்.