Begin typing your search above and press return to search.
மாநில அளவிலான கராத்தே போட்டி - 600 வீரர்கள் பங்கேற்பு
கரூரில் இன்று நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 600 வீரர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்
HIGHLIGHTS
கரூரில், கியோகுஷின் கராத்தே அமைப்பின் சார்பில், 7 ம் ஆண்டு மாநில அளவிலான கராத்தே போட்டி இன்று நடைபெற்றன. இதில், 600க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இதில், 40 கிலோ பிரிவில் இருந்து 65 கிலோ எடை வரையிலான போட்டிகளில். கரூர், நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் இருந்து 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட்டன.