கரூரில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
நேற்று முன் தினம் பிளஸ் 2 பள்ளி மாணவி தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இன்று கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்தார்.
HIGHLIGHTS
கரூரில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகில் உள்ள விவிஜி நகரை சேர்ந்தவர் மோகன் வீட்டிலேயே டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கான துணிமணிகளை தைத்துக் கொடுத்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.இவரது மகள் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வெங்கமேடு காவல் நிலையப் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் பள்ளி மாணவி பாலியல் சீண்டலால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. உயிரிழந்த மாணவி பாலியல் சீண்டலால் இறந்தாரா அல்லது வேறு காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.