/* */

நாட்டுபுறக் கலைஞர்கள் நிதியுதவி பெற கலெக்டர் அழைப்பு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை வரும் 15-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்னை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்திற்கு நேரிலும் அளிக்கலாம்.

HIGHLIGHTS

நாட்டுபுறக் கலைஞர்கள் நிதியுதவி பெற கலெக்டர் அழைப்பு
X

மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.

இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொன்மை சிறப்பு மிக்க தமிழக கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நபர் ஒருவருக்கு ரூ.10,000- வீதம் 500 கலைஞர்களுக்கு, தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் கலைஞர்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றவராகவும், பதிவினை புதுப் பித்தவராகவும் இருத்தல் வேண்டும். தனிப்பட்ட கலைஞரின் வயது வரும் 31-ம் தேதியன்று 18 ஆண்டுகள் நிரம்பியதாகவும், 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது. அஞ்சல் மூலம் விண்ணப்பம் பெற விரும்பும் கலைஞர்கள், கலைக் குழுக்கள் சுயமுகவரியிட்ட உறையில் ரூ.10க்கான அஞ்சல் தலை ஒட்டி செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ் குமாரசாமி ராஜா சாலை, சென்னை- 600 028 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண்: 044- 24937471. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை வரும் 15-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அல்லது அதற்கு முன்னரோ சென்னை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்திற்கு நேரிலும் அளிக்கலாம் அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 12 March 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை