Begin typing your search above and press return to search.
வியாபாரிடமிருந்து 2.57 லட்சம் பறிமுதல்
கரூர் மாவட்டம் குளித்தலையில் வாத்து வியாபாரியிடமிருந்து ரூ. 2.57 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குளித்தலை திருச்சி செல்லும் புறவழிச்சாலையில் மருதூர் சுங்கச்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் ராஜேந்திரன் தேர்தல் தொடர்பான வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது,கரூரில் இருந்து தஞ்சாவூருக்கு சென்ற நெரூரை சேர்ந்த வாத்து வியாபாரி பெருமாள் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ. 2.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த பணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கலியமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.