/* */

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் செம்மண் திருட்டு - 3 பேர் கைது, ஜேசிபி, டெம்போ பறிமுதல்

குமரியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் செம்மண் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் ஜேசிபி, டெம்போவை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் செம்மண் திருட்டு - 3 பேர் கைது, ஜேசிபி, டெம்போ பறிமுதல்
X

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் நிலப்பாறை பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சானல் கரை உள்ளது.

இந்த இடத்தில் செம்மண் திருடப்படுவதாக மயிலாடி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வல்சனுக்கு வந்த தகவலின் அடிப்படையில், வல்சன் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது அங்கு ஜேசிபி மற்றும் டெம்போ உதவியுடன் மணல் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வல்சன் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி, அஞ்சுகிராமம் காவல்நிலைய எஸ்ஐ ஜெசி மேனகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் மயிலாடி வடக்கூர் பகுதியை சேர்ந்த சபாபதி(45), மயிலாடி சேந்தன்புதூரை சேர்ந்த டெம்போ ஓட்டுனர் வானுமாமலை(43), மகாதானபுரம் சுண்டன்பரப்பை சேர்ந்த செல்வகுமார்(36) என்பதும், அவர்கள் சபாபதிக்கு சொந்தமான நிலத்தில் மண் போடுவதற்காக மணல் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் மற்றும் டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 15 Feb 2022 12:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...