/* */

குமரியில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை

குமரியில் பல்வேறு இடங்களில் பெய்த இடி மின்னலுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

குமரியில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் பெய்த கன மழைக்கு பின்னர், கடும் வெயிலானது பொது மக்களை வாட்டி வதைத்து வந்தது. வெளியே நடமாட முடியாத அளவிற்கு இருந்து வந்த வெயிலின் காரணமாக பொதுமக்களும், வாகன ஒட்டிகளும், மாணவ மாணவிகளும் பெரும் பாதிப்பை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், சுசீந்திரம், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி உட்பட பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. தற்போது பெய்து வரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் பெய்து வரும் கனமழையால் விவசாயம் செழிப்பதோடு குடிநீர் தேவையும் நிறைவேறும் என்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 17 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  7. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  8. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  9. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  10. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்