Begin typing your search above and press return to search.
வரும் 27-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு - விவசாய சங்கம் அறிவிப்பு
நாடு முழுவதும் வரும் 27 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கம் அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சண்முகம், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் 27 ம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது, தமிழ்நாட்டில் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த அனைத்துக் கட்சிகளிடம் ஆதரவு கோரி உள்ளோம். வரும் 27 ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் ரயில் மறியல் போன்ற போராட்டங்கள் நடைபெற இருக்கிறது, இந்த போராட்டங்களில் ஒரு லட்சம் விவசாயிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றார்.