/* */

முழு ஊரடங்கு நாளில் பூ விற்பனைக்கு விலக்கு: வியாபாரிகள் கோரிக்கை

முழு ஊரடங்கு நாளில் பூ விற்பனைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

முழு ஊரடங்கு நாளில் பூ விற்பனைக்கு விலக்கு: வியாபாரிகள் கோரிக்கை
X

தோவாளை பூ சந்தை.

தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற மலர் சந்தையான கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள டாக்டர். எம்ஜிஆர் மலர் சந்தைக்கு மதுரை திண்டுக்கல், ராயக்கோட்டை, ஓசூர், பெங்களூர் என வெளியூர்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் வருகின்றன.

மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம், ஆரல்வாய்மொழி தோவாளை, செண்பகராமன்புதூர் என குமரி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல டன் பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.

அதன்படி கொண்டு வரப்படும் பூக்கள் தோவாளை மலர் சந்தையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா மாநிலத்துக்கு பூக்கள் ஏற்றுமதி நடைப்பெறும்.

குறிப்பாக கேரளா மாநிலத்தின் 70% பகுதிகளுக்கு இங்கு இருந்து தான் வாகனங்கள் மூலமாக மொத்தமாக பல டன் பூக்கள் அனுப்பபடுகிறது.

இந்நிலையில் கொரோனா ஓமிக்கிரான் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டங்களில் பறிக்கப்படும் பூக்களை தோவாளை பூ சந்தைக்கு கொண்டு வந்து அதனை கேரளா மாநிலத்திற்கு வாகனங்கள் மூலமாக கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அன்றாடம் பறிக்கப்படும் பூக்கள் வாடி விடும் என்பதால் மறுநாள் விற்பனை செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த காரணத்தால் பூ விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே பூ விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அறிவித்தது போன்று பூ விவசாயத்திற்கும் பூ விற்பனைக்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிப்பதோடு, குமரி மாட்டத்தில் இருந்து பூக்களை வாகனங்கள் மூலமாக கேரளா மாநிலம் கொண்டு செல்லவும் அனுமதி அளிக்க வேண்டும் என பூ விவசாயிகளும் பூ வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 9 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்