குமாரபாளையத்தில் காவடி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்
குமாரபாளையத்தில் காவடி ஆடியவாறு பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றினர்.
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் காவடி ஆடியவாறு பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றினர்.
பங்குனி உத்திர விழாவையொட்டி குமாரபாளையம் நகரில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உடையார்பேட்டை ராஜகணபதி கோவிலில் பங்குனி உத்திரவிழாவையொட்டி கணபதி மற்றும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற காவடி எடுத்து ஆடியவாறு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்தனர். குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில் சவுண்டம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடசிபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.