சொத்துவரி உயர்வை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்த அதிமுக, பாஜகவினர்
சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தேரூர் பேரூராட்சி கூட்டத்திற்கு அதிமுக, பாஜக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு காலி மனைகளுக்கான வரிவிதிப்பு உள்ளிட்ட தமிழக அரசின் நடவடிக்கைகள் பொது மக்களை பெரிய அளவில் பாதிக்கச் செய்கின்றது. தமிழக அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆர்ப்பாட்டம் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் நேற்று நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட அதிமுக மற்றும் பாஜக வார்டு உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். அதன் ஒரு பகுதியாக தேரூர் பேரூராட்சி மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
மேலும் பொதுமக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை சரிபாதியாக குறைக்க வேண்டும், காலி மனைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிவிதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.