/* */

வாலாஜாபாத்: பாலாற்றில் வெள்ளம் காரணமாக 6வது நாளாக போக்குவரத்து தடை

வாலாஜாபாத் பாலாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தம் 6வது நாளாக நீடிப்பதால் பொதுமக்கள் அவதி.

HIGHLIGHTS

வாலாஜாபாத்: பாலாற்றில் வெள்ளம் காரணமாக 6வது நாளாக போக்குவரத்து தடை
X

வாலாஜாபாத் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை காரணமாக அனைத்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. இது மட்டுமில்லாமல் பாலாறு மற்றும் செய்யாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக வாலாஜாபாத் பாலாற்றில் தரை பாலத்திற்கு மேல் நீர் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வாலாஜாபாத் - இளையனார்வேலூர் சாலை போக்குவரத்து கடந்த 6வது நாளாக தடைசெய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பொதுமக்களே காலை தடைகளை அகற்றி போக்குவரத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த வருவாய்த்துறை , நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறையினர் ஆய்வு மேற்கொண்டு மீண்டும் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை தடை செய்தனர். மேலும் இரு பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 17 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  3. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  4. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  5. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  6. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  9. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்