/* */

அறிவித்த தடுப்பணைகளை கட்ட விரைந்து நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட தடுப்பணைகள் கட்ட விரைவாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

அறிவித்த தடுப்பணைகளை கட்ட விரைந்து நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நல்லுறவு கூட்ட அரங்கில் விவசாயிகளுக்கான மாதாந்திர நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நல்லுறவு கூட்ட அரங்கில் விவசாயிகளுக்கான மாதாந்திர நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் வேளாண்மை இணை இயக்குனர் கோல்டன் பிரேமாவதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு நடப்பு பருவம், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உரம் இருப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

இதன் பின் கடந்த மாதம் விவசாயிகள் கொடுக்கப்பட்ட 74 குறை மனுக்களை பரிசீலனை செய்து அதற்கான விளக்கங்கள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதன்பின் விவசாயிகள் குறைகளை தெரிவிக்கையில், தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள காலத்தில் தற்போது ஏரிகள் நிரம்பி உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பாலாற்றில் கட்டப்பட்ட தடுப்பணைகள் நிரம்பி நீர் வீணாக கடலில் சென்று சேர்கிறது

இதனை தவிர்க்கும் பொருட்டு கடந்த காலங்களில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றில் கட்டப்படும் தடுப்பணைகள் குறித்து அளிக்கப்பட்ட உறுதிகளை நிறைவேற்றும் வகையில் கூடுதல் தடுப்பணைகள் கட்ட மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம் , வருவாய் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 29 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  7. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  8. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  9. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  10. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்