ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள்அமைச்சருக்கு திடீர் உடல் நல குறைவு
மின் கட்டண உயர்வை கண்டித்து காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரத்திற்கு உடல் நலகுறைவு ஏற்பட்டது.
HIGHLIGHTS
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக முழுதும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவலன் கேட் பகுதியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் காலை 11 மணியளவில் துவங்கியது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பேசி முடித்த நிலையில் மாவட்ட செயலாளர் வி சோமசுந்தரம் தமிழக அரசின் பொதுமக்கள் விரோத செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
இன்று காஞ்சிபுரத்தில் கடும் கோடை வெயில் வாட்டிய நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஆங்காங்கே மர நிழலில் ஒதுங்கி இருந்த நிலையில் திடீரென மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் உடல் நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு அதன் பின் வீடு திரும்பி தற்போது ஓய்வு பெற்று வருகிறார்.