மாரத்தான் ஓட்டம் மூலம் விழிப்புணர்வு
100% வாக்கு பதிவினை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் 1500 பேர் பங்கேற்ற மாரத்தான் ஓட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம்தேதி அன்று 2021சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் அனைவரும் வாக்களிக்க வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு துறைகள் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் பள்ளி, கல்லூரி மற்றும் விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் என பல்வேறு பிரிவுகளில் கீழ் 1500 பேர் பங்கேற்ற மாரத்தான் ஓட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த மாரத்தான் ஓட்டம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கி ஆஸ்பிடல் சாலை, இந்திராகாந்தி சாலை, காமராஜர் சாலை, மேட்டுத்தெரு என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
ஆண்கள், பெண்கள் பிரிவில் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பரிசுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.