ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் வேட்புமனு வாங்கி சென்ற 15 பேர்
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட 15 நபர்கள் மட்டும் இன்று வேட்பு மனு விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 11 ஆயிரத்து 4 ஆண் வாக்காளர்களும், 11 ஆயிரத்து 372 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 22 ஆயிரத்து 376 வாக்காளர்கள் உள்ளன.
25 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்களுக்கு 10 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளர்களுக்கு 10 வாக்குச்சாவடிகள், பொதுவான வாக்குச்சாவடிகள் 5 ஆகும்.
மேலும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு இன்று முதல் தொடங்கிய நிலையில் இன்று ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுவை வெறும் 15 பேர்கள் மட்டுமே வாங்கி சென்றனர்.
மேலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் இன்னும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படாததால் வேட்புமனு பெற்று செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.