Begin typing your search above and press return to search.
நடிகர் கமல்ஹாசன் கொரோனாவிலிருந்து விரைவில் மீண்டு வர சிறப்பு பூஜைகள்
காஞ்சிபுரத்தில் நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர மக்கள் நீதி மய்யம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
HIGHLIGHTS
திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் நிறுவனமான கமல்ஹாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று திரும்பி வந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
தொற்றிலிருந்து விரைவில் கமலஹாசன் விடுபட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரைத்துறையினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் நீதி மையம் சார்பில் காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் மண்டல பொறுப்பாளர் கோபிநாத், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு குணமடைய பிரார்த்தனை செய்தனர்.