சர்ச்சைக்குரிய காஞ்சி கோவிலில் நீண்ட பாம்பு தோலை கண்டு அதிர்ச்சி
கோவிலில் ஆய்வு செய்ய வந்த அமைச்சர், எம்பி, எம்எல்ஏ பக்தர்கள் உள்ளிட்டோர் இதை பார்த்து ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
கடந்த இரண்டு நாட்களாக காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஒரு கோயில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதனை ஆய்வு செய்ய முயற்சி இரவு 9 மணி அளவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் எழிலரசன் இந்து சமய அறநிலையத்துறை பொன் ஜெயராமன், உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு ஆய்வாளர் கிருத்திகா உள்ளிட்டோர் அப்பகுதி ஆய்வு செய்தனர்.
இத்திருக்கோயிலில் இரண்டு சிவலிங்கம் கருவறையும் , ஒரு வீரபத்திர சுவாமி கருவறையும் அமைந்துள்ளதை, கோவிலை நிர்வகித்து வரும் நிர்வாகிகள் அமைச்சர் சேகர்பாபுவிடம் விளக்கி கூறி இதன் வரலாறுகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் ஒரு சிவலிங்கம் கருவறையில் சிவலிங்கம் பீடத்தின் கீழ் நீண்ட நெடிய பாம்பு ஒன்று தோலுரித்து சென்றுள்ளது காண முடிந்தது. இதை கண்ட அமைச்சர் சேகர்பாபு, எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தோலுரித்த பாம்பு சுமார் 6அடி மேல் இருக்கும் என தெரிகிறது.இது அந்த கல் மண்டபத்தில் பாம்பு நடமாட்டம் உள்ளதா ? இதுவரை அப்பகுதியில் எவ்வித அசாம் மாநிலம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.