/* */

காஞ்சிபுரம் நகரில் முறையின்றி இயங்கி வந்த ஏழு ஆட்டோக்கள் பறிமுதல்

காஞ்சிபுரம் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் திடீர் சோதனை மேற்கொண்டு 7 ஆட்டோக்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் நகரில் முறையின்றி இயங்கி வந்த ஏழு ஆட்டோக்கள் பறிமுதல்
X

விதிகளை மீறி செயல்பட்டு வந்த ஆட்டோக்களை ஆய்வு செய்தார் காஞ்சிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம்.

காஞ்சிபுரம் நகரில் இயங்கும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுத்தப்படுவதாக பொதுமக்கள் பெரிதும் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் உத்தரவின் பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திடீர் என வாகன சோதனை மேற்கொண்டார்.

இதில் காஞ்சிபுரம் நகர் மற்றும் நகரில் இருந்து செல்லும் ஆட்டோக்களை மடக்கி அவற்றின் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டார். இதில் இன்ஷூரன்ஸ் ஆட்டோ உரிமம் புதுப்பித்தல் வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாத பல வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி செயல்பட்டு ஆட்டோக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 13 Sep 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்