/* */

தெருக்கூத்து பார்த்து கொண்டிருந்த இளநீர் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது

காஞ்சிபுரம் அருகே கன்னியம்மன் கோயில் திருவிழாவில் இளநீர் வியாபாரியை இருவர் அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு கிராமம் டேங்க் தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவர் காஞ்சிபுரத்தில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் விப்பேடு கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலில் அக்னி வசந்த திருவிழா நடைபெற்று வருகிறது இதில் நேற்று இரவு தெருக்கூத்து நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இரவு 1மணியளவில் இந்நாடகத்தை தனசேகர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் தெருகூத்தை கண்டு களித்துக் கொண்டிருந்த போது திடீரென கூட்டத்தில் நுழைந்த மர்ம நபர்கள் தனசேகரனைன தலை, கை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றனர்.

அப்போது கோயில் திருவிழா பாதுகாப்பில் இருந்த சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகிய இருவரும் குற்றவாளிகளை துரத்திக் கொண்டு சென்ற நிலையில் மின்னல் வேகத்தில் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

உடனடியாக வெட்டு பட்ட தனசேகரனை மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி செய்து சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெருக்கூத்து நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் நடைபெற்றதால் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு பல்வேறு திசைகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே தனசேகருக்கு அப்பகுதியில் இருந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது . தற்போது இரவு நேரத்தில் தப்பிக்க இயலாத நிலையில் மாட்டிக் கொண்டதால் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

Updated On: 20 April 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு