தெருக்கூத்து பார்த்து கொண்டிருந்த இளநீர் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது
காஞ்சிபுரம் அருகே கன்னியம்மன் கோயில் திருவிழாவில் இளநீர் வியாபாரியை இருவர் அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு கிராமம் டேங்க் தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவர் காஞ்சிபுரத்தில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் விப்பேடு கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலில் அக்னி வசந்த திருவிழா நடைபெற்று வருகிறது இதில் நேற்று இரவு தெருக்கூத்து நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இரவு 1மணியளவில் இந்நாடகத்தை தனசேகர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் தெருகூத்தை கண்டு களித்துக் கொண்டிருந்த போது திடீரென கூட்டத்தில் நுழைந்த மர்ம நபர்கள் தனசேகரனைன தலை, கை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றனர்.
அப்போது கோயில் திருவிழா பாதுகாப்பில் இருந்த சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகிய இருவரும் குற்றவாளிகளை துரத்திக் கொண்டு சென்ற நிலையில் மின்னல் வேகத்தில் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
உடனடியாக வெட்டு பட்ட தனசேகரனை மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி செய்து சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெருக்கூத்து நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் நடைபெற்றதால் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு பல்வேறு திசைகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே தனசேகருக்கு அப்பகுதியில் இருந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது . தற்போது இரவு நேரத்தில் தப்பிக்க இயலாத நிலையில் மாட்டிக் கொண்டதால் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.