தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் அத்துமீறல்..
மும்மடங்கு கட்டணம்
HIGHLIGHTS
கொரோனா நோய் தொற்று அதிகம் பரவி வரும் காஞ்சிபுரத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 800க்கும் அதிகமானோர் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பலருக்கும் நுரையீரல் பாதிப்பு உள்ளதால், ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிடன் கூடிய படுக்கைகள் நிரம்பி விட்டன.
காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமத்திலிருந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிசன் வசதி கொண்ட தனியார் ஆம்புலன்ஸில் நோயாளியை அழைத்துச் செல்ல 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது
ஏறத்தாழ ஒன்பது கிலோ மீட்டருக்கு 6 ஆயிரம் ரூபாய் என்பது அதிகப்படியான தொகையாக இருக்கிறது காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் அழைத்துச்செல்ல நான்காயிரம் ரூபாய் மட்டுமே வசூலித்து வந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நோயாளிகளை அழைத்துவர அதிகப்படியான கட்டணம் வசூலிப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேலும் ஆம்புலன்ஸ் நோயாளியை காத்திருக்க வைக்க ஒரு மணி நேரத்துக்கு 2000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது இதனைத்தொ்டர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.