/* */

சிறுமிகளை முறையின்றி அழைத்துச் சென்ற 2 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது

காஞ்சிபுரம் அருகே சிறுமிகளை முறையின்றி அழைத்துச் சென்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

சிறுமிகளை முறையின்றி அழைத்துச் சென்ற 2 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது
X

காஞ்சிபுரம் அருகே முறையின்றி இரண்டு சிறுமிகளை அழைத்து சென்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட வாலிபர்கள்.

காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் நேற்று காலை 9 மணிக்கு பாலுசெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

அதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட ஆய்வாளர் வெங்கடேசன் செவிலிமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் சிறுமியை முறையின்றி அழைத்து சென்றது தெரிய வந்து உடனடியாக அவரை கைது செய்து சிறுமியை மீட்டனர

இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உடபட்ட 17 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் கடந்த 12ஆம் தேதி புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் கிஷோர் குமார் விசாரணை மேற்கொண்டபோது விழுப்புரம் மாவட்டம், மேல் திருவள்ளூரை சேர்ந்த அசாருதீன் என்பவர் சிறுமியை முறையின்றி அழைத்துச் சென்றது தெரிய வர உடனடியாக அப்பகுதிக்கு சென்று சிறுமியை மீட்டு அசாருதீன் கைது செய்தனர்.

மேற்கண்ட இரு வழக்கிலும் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்

Updated On: 14 July 2021 11:45 AM GMT

Related News