Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரத்தில் நலிவடைந்த போட்டோ வீடியோ கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரத்தில் நலிந்த போட்டோ கலைஞர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை போட்டோ வீடியோ சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடங்களாக ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கி வாழ்வாதாரம் பாதிக்கபட்டது. குறிப்பாக இளைஞர்கள் அதிக மூதலீடு செய்து போட்டோ ஸ்டுடியோ மற்றும் வீடியோ தொழில் செய்து வருகின்றனர். கொரோனா காரணமாக கடைவாடகை , மின்கட்டணம் என சிரமத்திற்கிடையே குடும்பத்தையும் சிரமமான முறையில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட போட்டோ வீடியோ கிராபர்கள் சங்கம் சார்பில் நலிவுற்ற உறுப்பினர்களுக்கு ₹ 1500 மதிப்பிலான அரிசி மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மேலும் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த உறுப்பினரின் இறந்த உறுப்பினரின் சடங்கிற்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.