/* */

ஒமிக்ரான் தொற்று தடுப்பு: காஞ்சிபுரத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனை

காஞ்சிபுரம் நகரில் ஓமிக்கிரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து தரப்பு வியாபாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

HIGHLIGHTS

ஒமிக்ரான் தொற்று தடுப்பு: காஞ்சிபுரத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனை
X

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் பி.நாராயணன் பங்கேற்றார். 

காஞ்சிபுரம் நகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து அறிஞர் அண்ணா அரங்கில் வணிகர் சங்க நிர்வாகிகள், பட்டுக்கடை உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் ஆகியோருடன், ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாநகராட்சி ஆணையாளர் பி.நாராயணன் பேசியதாவது: ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடிய நோய்த் தொற்று. எனவே வணிகர்கள், பொதுமக்கள் கொரோனா தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் கை கழுவும் திரவம், முகக்கவசம், உடல் வெப்ப பரிசோதனைக் கருவி ஆகியனவற்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே ஒமிக்ரான் பரவலை தடுக்க முடியும் என்றார்.

கூட்டத்தில் பேசிய வணிகர்கள் டிசிபி ஊழியர்கள் கடைகளில் ஆய்வு செய்யாமலே அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும் என்றனர். கூட்டத்துக்கு சுகாதாரத்துறை துணை இயக்குநர் சித்ரசேனா, காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் இக்பால் வரவேற்றார். கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் பிரபாகரன், சீனிவாசன், லெட்சுமிபிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக சுகாதார ஆய்வாளர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.

Updated On: 21 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்