மாசி பிரம்மோற்சவம் : இரண்டாம் நாள் மகர வாகனத்தில் காமாட்சி எழுந்தருளல்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் பகல் மகரம் வாகனத்தில் 4ராஜவீநிகளில் அம்பாள் திருவீதியுலா
HIGHLIGHTS
சக்தி பீடங்களில் ஒன்றானதும், உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி ப்லவ ஆண்டு மாசி மாதம் பிரம்மோற்சவம் நேற்று கொடி ஏற்றத்துடன் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் துவங்கியது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையிலேயே காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதைத்தொடர்ந்து உற்சவ காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் லக்ஷ்மி சரஸ்வதி தேவியுடன் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து வெளிப் பிரகார மண்டபத்தில் எழுந்தருளி கொடியேற்றம் நடைபெற்றது. மாசி மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளாலும் , வண்ண மலர் மாலைகளாளும் , அலங்கரிக்கபட்டிருந்தது.
பிரம்மோற்சவ விழாவின் இன்று இரண்டாம் நாள் காலை மகரம் வாகனத்தில் காமாஷி , லஷ்மி , சரஸ்வதியுடன் மனோரஞ்சித மலர்கொண்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்