/* */

காஞ்சிபுறத்தில் யில் 24 மணி நேரமும் மது விற்பனையா?

காஞ்சிபுரம் நகரில் சங்கர மடம் மற்றும் கோயில் அருகே உள்ள மதுக்கடை வளாகத்தில் 24 மணி நேரமும் மது கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுறத்தில் யில் 24 மணி நேரமும்  மது விற்பனையா?
X

காஞ்சிபுரம் பேருந்து நிலைய வெளிப்புற பேருந்து நிறுத்தம் அருகில் அதிகாலையிலேயே சாலை வீழ்ந்து கிடக்கும் போதை நபர்‌

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு காலை 12 முதல் இரவு 10 வரை மதுபானங்கள் விற்கப்படுகிறது.

அரசு மதுபான கடைகள் மூலம் குறைந்த வருவாய் ஈட்டும் நபர்களின் வாழ்வாதாரம் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக கூறி மதுபான கடைகளை மூடக்கோரி பெண்கள் மற்றும் சில அரசியல் கட்சியினர் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் மதுபான கடைகள் வேலை நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் விற்பனை செய்ய அனுமதி இல்லாத நிலையில் காஞ்சிபுரம் நகரில் சங்கரமடம் அருகில் பெரிய காஞ்சிபுரம் காய்கறி சந்தை அருகே செயல்படும் மதுபான கடையும், பேருந்து நிலையம் அருகே உள்ள நெல்லுக்காரத் தெருவில் சித்தர் குப்தர் கோயில் அருகே செயல்படும் அரசு மதுபான கடை வளாகத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது என குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.

அதிகாலை வேலைக்கு வரும் கூலி தொழிலாளர்கள் முதல் அனைத்து தரப்பு மது பிரியர்களும் அதிகாரியிலேயே கள்ள சந்தையில் மதுபானங்கள் வாங்கி குடித்து தன்னிலை மருந்து பல்வேறு இடத்தில் விழுந்து கிடக்கின்றனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வெளியே நிழற்குடை அருகே காலை 8 மணிக்கு சாலையில் விழுந்து கிடக்கும் போதை ஆசாமியை எழுப்ப பலமுறை முயற்சித்தும் இயலாதால் அங்குள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் அவரை பேருந்து நிலையங்களை ஓரமாக படுக்க வைத்துள்ளனர்.

அந்த நபர் ஏதோ சுப நிகழ்ச்சிக்கு செல்ல பூக்கடை சத்திரம் சென்று பூக்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் வழியில் அளவுக்கு அதிகமான மது அருந்தி சாலையில் விழுந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

அரசு மதுபான கடை வேலை நேரம் ஆரம்பிப்பதற்குள் அதிகாலையிலேயே மது விற்பனை செய்யப்படுவதால் இது போன்ற பலர் பணத்தை மட்டுமில்லாமல் , தன்மானத்தையும் பெரிதும் இழக்கின்றனர்.

இதனை கண்காணித்து கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் , காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் பெரும் குற்றச்சாட்டாக உள்ளது.

Updated On: 20 May 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  5. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  7. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  8. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  10. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து