/* */

தொடர் மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 114 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கன மழையாலும் , வெளி மாவட்ட நீர் வரத்தாலும் , 114 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

HIGHLIGHTS

தொடர் மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 114 ஏரிகள் நிரம்பின
X

முழு கொள்ளளவை எட்டியுள்ள ஆற்பாக்கம் கிராம ஏரி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கன மழையாலும், வெளிமாவட்டங்களில் வெளியேற்றப்பட்ட உபரி நீராலும், காஞ்சிபுரம் பாலாறு , செய்யாறு ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. அவற்றை, பொதுப்பணித்துறையினர் அருகிலுள்ள ஏரிகளுக்கு செல்லும் வகையில், வழிவகை செய்து ஏரிகளை நிரப்பினர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில், 114 ஏரிகள் முழு கொள்ளளவையும், 87 ஏரிகள் 75 சதவீதத்தையும், 65 ஏரிகள் 50 சதவீதத்தையும் எட்டியுள்ளன. காஞ்சிபுரம் பகுதிகளில் 55 ஏரிகளும் , வாலாஜாபாத், உத்திரமேரூர் பகுதிகளில் 17 ஏரிகளும், ஸ்ரீபெரும்புதூர், படப்பை, குன்றத்தூர் பகுதிகளில், நாற்பத்தி இரண்டு ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனிடையே, இன்று காலை முதல் , வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சிறு சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது.

Updated On: 6 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!