Begin typing your search above and press return to search.
தொடர் மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 114 ஏரிகள் நிரம்பின
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கன மழையாலும் , வெளி மாவட்ட நீர் வரத்தாலும் , 114 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கன மழையாலும், வெளிமாவட்டங்களில் வெளியேற்றப்பட்ட உபரி நீராலும், காஞ்சிபுரம் பாலாறு , செய்யாறு ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. அவற்றை, பொதுப்பணித்துறையினர் அருகிலுள்ள ஏரிகளுக்கு செல்லும் வகையில், வழிவகை செய்து ஏரிகளை நிரப்பினர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில், 114 ஏரிகள் முழு கொள்ளளவையும், 87 ஏரிகள் 75 சதவீதத்தையும், 65 ஏரிகள் 50 சதவீதத்தையும் எட்டியுள்ளன. காஞ்சிபுரம் பகுதிகளில் 55 ஏரிகளும் , வாலாஜாபாத், உத்திரமேரூர் பகுதிகளில் 17 ஏரிகளும், ஸ்ரீபெரும்புதூர், படப்பை, குன்றத்தூர் பகுதிகளில், நாற்பத்தி இரண்டு ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனிடையே, இன்று காலை முதல் , வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சிறு சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது.