காஞ்சிபுரத்தில் 70 வயது மூதாட்டியின் கோரிக்கை நிறைவேறியது
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் மனு கொடுத்த 70 வயது மூதாட்டிக்கு மூன்று சக்கர வாகனத்தை அமைச்சர் அன்பரசன் வழங்கனார்.
HIGHLIGHTS
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீதான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது
இவ்விழாவில் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா , முதியோர் உதவித்தொகை, தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர், குடிசை மாற்று வாரியம் சார்பில் இலவச வீடு என 787 பயனாளிகளுக்கு எட்டு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் உத்தரமேரூர் ஒன்றியம் அப்பைநல்லூர் கிராமத்தில் வசிக்கும் மூதாட்டி கமலா என்பவர் மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது மனு அளித்துள்ளார்.
நான் சேலை வியாபாரம் செய்வதாகவும் மாற்றுத்திறனாளி என்பதால் தனக்கு அந்தத் துறையின் சார்பில் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று அவருக்கு 83 ஆயிரத்து 963 மதிப்பிலான இருசக்கர வாகனத்தில் அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.