/* */

காஞ்சிபுரம் ‌‌ : கூரம் ஏரியை கிராம மக்களுடன் இணைந்து பொதுப்பணித்துறை சீரமைப்பு

கூரம் ஏரி கரைகளை பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித் துறையினர், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ‌‌ : கூரம் ஏரியை கிராம மக்களுடன் இணைந்து பொதுப்பணித்துறை சீரமைப்பு
X

கூரம் ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பொதுமக்கள், பொதுப்பணித்துறையினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் முதலில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதாகவும கடந்த இரண்டு நாட்களாக சில மணி நேரம் கனமழை பெய்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் தற்போது 99 ஏரிகள் முழு கொள்ளளவையும் எட்டி உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில் தொடர் மழை காரணமாக ஏரி நிரம்பியுள்ளது. இந்த ஏரிக்கரையில் ஒரு பகுதியில் கரை வலுவிழக்கும் நிலையில் உள்ளதாக அக்கிராம மக்கள் பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக பொதுப்பணித்துறையினர் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்களுடன் இணைந்து மணல் மூட்டைகள் உடன் அப்பகுதியில் சீரமைக்கும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் சரியான தருணத்தில் பொதுப்பணித்துறை தங்களுடன் இணைந்து செயல்படுவதால் நீர் கசிவது வெளியேறுவது தவிர்க்கப்படும். இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் மேற்கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.

Updated On: 31 Oct 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?