/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

பைல் படம்

காஞ்சி மண்டல சரக டிஐஜி எம்.சத்யபிரியா காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருவோரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகருக்கு உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் கடந்த ஒரு மாத காலமாகவே மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட பல நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவ்வகையில் இன்று உத்திரமேரூர் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு குற்றவாளிகளான வசீகரன், சரன்ராஜ் மற்றும் நிஷாந்த் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேபோல் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ரகு மற்றும் பிரஷாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 110 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நன்னடத்தையுடன் செயல்பட சூர்யா மற்றும் கணேஷ் ஆகியோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 30 July 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?