ஊராட்சி மன்ற தலைவிகள்தான் ஊராட்சியை நிர்வகிக்க வேண்டும்: கலெக்டர்
உள்ளாட்சிகளில் பெண்களுக்கு பதிலாக கணவரோ, சகோதரர்களோ செயல்படக்கூடாது என, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி உள்ளாட்சி தேர்தலில், 60சதவீத பெண்கள் வெற்றிப் பெற்று கிராம ஊராட்சி மன்ற பொறுப்பேற்று உள்ளனர்.
வெற்றிப் பெற்றுள்ள இந்த பெண் பிரதிநிதிகள்தான், அவரவருக்கான ஒதுக்கப்பட்ட நிர்வாகத்தை நிர்வகிக்க வேண்டும். இதற்கு மாறாக பெண் பிரதிநிதிகளின் கணவரோ, சகோதரர்களோ, உறவினர்களோ என, யாரும் தலையிடக் கூடாது. ஊராட்சி மன்றக் கூட்டங்களிலும் இது சம்பந்தமான அலுவலகங்களிலும் மேற்கண்டவர்கள் பங்கேற்கவோ, தலையீடு செய்யக்கூடாது.
இந்த அறிவுரைகளை பின்பற்றாமல் செயல்படுவது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் அனைத்தும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.