Begin typing your search above and press return to search.
இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: 2 மணி நேரத்தில் நெல் மூட்டைகளை மூடி நடவடிக்கை
வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டை சேதம் செய்தியை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் பகுதியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் தொடர் மழை காரணமாக நனைந்து வீணாகி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகுவதாக நமது தளத்தில் செய்தி வெளியானது.
இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நெல் மூட்டைகள் மூடப்பட்டு பாதுகாப்பட்டது.
உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.