காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் 6 சவரன் நகை திருட்டு
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே சர்ச்சுக்கு வந்த மூதாட்டியிடம் நூதன முறையில் மர்ம நபர்கள் 6 சவரன் நகையை திருடிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மின்நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஆல்பிரின். இன்று 11 மணியளவில் ரயில்வே சாலையில் உள்ள சர்ச்க்கு சென்றுள்ளார்.
அப்போது அரசு மருத்துவமனை அருகே நடந்து வந்த போது இரு மர்ம நபர்கள் மூதாட்டியிடம் இங்கு சென்று கொண்டு இருக்கிறீர்கள் என கேட்டு. அந்தப் பகுதியில் அசம்பாவிதம் மூன்று நடந்துள்ளதாகவும் , அதிக அளவில் காவல்துறை உள்ளதாகவும் நகை போட்டு செல்பவர்களை திட்டுவதாக கூறி நகைகளை கழற்றி பத்திரமாக பைகளில் போட்டு கொள்ளுமாறு கூறி உள்ளனர்.
இதைக் கேட்ட மூதாட்டி கைகளில் போட்டிருந்த வளையல் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் நகைகளை தன் பையில் போட முயற்சித்த போது இப்படி போட்டால் பைகளில் தவறி விழுந்து விடும் என கூறி மீண்டும் பொட்டலம் கட்டுவது போல் அவரின் கவனத்தை திசை திருப்பி அபேஸ் செய்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
மூதாட்டி சர்ச்சுக்கு சென்றபின் பையை சோதனை போட்டபோது பையில் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது மகனுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்