தேர்தல் பணியாற்றும் போலீசாருக்கு எஸ்.பி அறிவுரை
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1857 போலீசார் பணிபுரிய உள்ளதாக மாவட்ட எஸ்பி சண்முகப்பிரியா தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு துவங்க உள்ள நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி., சண்முகப்பிரியா போலீசாருக்கு தேர்தல் நடைமுறைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் , தேர்தல் பணியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 997 காவலர்கள், 124 ஆயுதப்படை காவலர்கள், 235 எல்லை பாதுகாப்பு காவலர்கள் 235 பேர் 250 என்எஸ்எஸ் மாணவர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 120 பேர் பணிபுரியவுள்ளனர்.இதைத்தவிர வேறு இரண்டு ஏடிஎஸ்பி கள் , 7 துணை காவல் கண்காணிப்பாளர்கள் 14 இன்ஸ்பெக்டர்கள், 14 சப்இன்ஸ்பெக்டர்கள் , சிறப்பு எஸ்ஐகள் 76பேர் உள்பட 1857 போலீசார் மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.