மருத்துவ கல்லூரி மாணவர்கள் 40 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிகரை பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நோய்த் தொற்றுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வந்தது. அந்த கல்லூரியில் படித்து வரும் கல்லூரி மாணவர்களில் 900க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதை அடுத்து 4 மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்களை பரிசோதனை மேற்கொண்டு, அதில் தற்போது வரை 40 மருத்துவ கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே மருத்துவக் கல்லூரியில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை சிறப்பு மருத்துவ முகாம் இன்றிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.