/* */

ரூ 10.96 லட்சம் மதிப்பிலான பயிர் கடன்களை வழங்கிய ஆட்சியர் கலைச்செல்வி

மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் ரூ 10.96 லட்சம் மதிப்பிலான பயிர் கடன்கள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

ரூ 10.96 லட்சம் மதிப்பிலான பயிர் கடன்களை வழங்கிய  ஆட்சியர் கலைச்செல்வி
X

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிக்கு பயிர் கடன் வழங்கிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் மண்டல இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு ரூ.10.96 இலட்சம் மதிப்பிலான பயிர் கடன் மற்றும் வேளாண் இடுப்பொருட்களை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கலைச்செல்வி வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட

ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், வேளாண்மை துறை சார்பில், 1 விவசாய பயனாளிக்கு ரூ.830/- மானியத்தில் தார்பாலினும், 2 விவசாய பயனாளிக்கு ரூ.6,000/- மானியத்தில் விசை தெளிப்பான்களும், 1 விவசாய பயனாளிக்கு ரூ.2,000/- மானியத்தில் மின்கலன் தெளிப்பானும், 1 விவசாய பயனாளிக்கு ரூ.2,500/- மானியத்தில் நேரடி நெல் விதைப்பான் , தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், 4 விவசாய பயனாளிகளுக்கு ரூ.2,94,157/- மானியத்தில் காளான் குடில் பணி ஆணைகளும் மற்றும் சொட்டு நீர் பாசனம் பணி ஆணையினையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களின் மூலம் 6 விவசாய பயனாளிகளுக்கு ரூ.4,06,522/- மதிப்பீட்டில் பயிர் கடன்களும், 6 விவசாய பயனாளிகளுக்கு ரூ.2,38,000/- மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புக் கடன்களும், 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.1,46,000/- மதிப்பீட்டில் மீன் வியாபார கடன்களும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் முனைவர்.பிரின்ஸ் கிளமென்ட், வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வே) ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Nov 2023 12:00 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  8. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  10. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...