காஞ்சிபுரம் குப்பைக் கிடங்கை சுத்தப்படுத்தி 8 ஏக்கரை மீட்கும் பணி
காஞ்சிபுரம் அருகே குப்பைக் கிடங்கை சுத்தம் படுத்தி, 8 ஏக்கர் நிலத்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதை கலெக்டர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் தினசரி சேகரிக்கபடும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு நத்தப்பேட்டை கிராமத்தில் உள்ள பசுமை உரக்கிடங்கில் 5 மெ.டன் அளவு கொண்ட மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து இயற்கை உரமாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
திடக்கழிவில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் குப்பைகள் சேகரிக்கப் பட்டிருந்த இடத்தை பார்வையிட்டும், இயற்கை உரம் தயாரிப்பதையும் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி ஆய்வு செய்தார்.
அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களிடம் கழிப்பறை வசதி, இட வசதி, குடும்ப அட்டை , ஆதார் அட்டை,வங்கிக் கணக்கு எண் ஆகியன உள்ளதா எனவும் குழந்தைகள் எவ்வாறு கல்வி கற்கின்றனர் எனவும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
நத்தப்பேட்டையில் உள்ள 8 ஏக்கர் பரப்பில் உள்ள குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தி நிலத்தை மீட்டு அங்கு பூங்கா அமைக்கவும் ஆட்சியர் நகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
ஆட்சியரது ஆய்வின் போது நகராட்சி ஆணையர் எஸ்.லெட்சுமி,பொறியாளர் ஆனந்த ஜோதி, சுகாதார ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்