சிதலமடைந்த செய்யாறு மேம்பால புனரமைப்பு பணி மெத்தனம்
வடகிழக்கு பருவமழையில் சேதமடைந்த செய்யாறு பாலம் புனரமைப்பு பணிகளில் ஒப்பந்ததாரர் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பாலாறு மற்றும் செய்யாற்றில் வரலாறு காணாத மழை பெய்து, ஆறுகளில் 1.70லட்சம் கன அடி நீர் பாய்ந்து வெள்ளப்பெருக்காக மாமல்லபுரம் கடலில் சென்று கலந்தது. இந்த வெள்ளப்பெருக்கால் மாகரல் செய்யாறு பாலம் , வாலாஜாபாத் - அவளுர் தரைப்பாலம் சுமார் 100மீ துண்டிக்கப்பட்டு, பொது போக்குவரத்து ஒரு மாத காலமாக தடைபட்டது.
மழை நின்ற பின்னர், நீரின் வேகம் குறைந்து, மின் கடந்த 10தினங்களுக்கு முன் துவங்கியது. வீராணம் குழாய் கொண்டு துண்டிக்கப்பட்ட பகுதியில் வைத்து பணிகள் துவங்கியது. தற்போதும் நீர் சென்று கொண்டிருப்பதால் பணிகள் தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது.
நீரை திசை திருப்பாமல் பணிகள் செய்ய இயலாது என்று கூறி ஒப்பந்ததாரர் காலம் தாழ்த்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகன போக்குவரத்தை பொதுமக்கள் துவங்கி சென்று வருகின்றனர். இன்று மீண்டும் பணி துவங்கும் என எதிர்பார்த்த நிலையில், பொதுமக்கள் செல்வதால் பணி செய்ய இயலவில்லை கூறுவதாகவும் தெரிவிக்கின்றனர். 30நாட்கள் மேலாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.