காஞ்சிபுரம் அருகே மின்சார வயர் மீது சாய்ந்த சிக்னல் கம்பம்
வாலாஜாபாத் ரவுண்டானா அருகே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிக்னல் கம்பம் அமைக்கப்பட்டதில் மின் வயர் மீது சாய்ந்துள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்து அமைந்துள்ளது வாலாஜாபாத் . இவ்வழியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் நூற்றுக்கணக்கான கல் குவாரி லாரிகள் மற்றும் இதர போக்குவரத்து லாரிகள் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் என நாளொன்றுக்கு பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
இந்நிலையில் வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இதில் வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில் உள்ள சிக்னல் கம்பம் திடீரென சாய்ந்து அருகில் உள்ள உயரழுத்த மின் வயர் மீது சாய்ந்துள்ளது.
மின் வயர்கள் அனைத்தும் புதை வடிகால் திட்டத்திற்கு பயன்படுத்தும் மின் வயர் என்பதால் எவ்வித அச்சமும் இல்லை என்பதும் இருப்பினும் , இதுகுறித்து வாலாஜாபாத் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், தற்போது உடனடியாக சிக்னல் கம்பத்தை பாதுகாப்புடன் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.