காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் மருத்துவ முகாம்
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைக்கு உரிய நல திட்ட உதவிகள் வழங்கப்படுவது மட்டுமில்லாமல் அவர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு , வங்கி கடன் உதவி, சுயதொழில் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மூலம் சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் தலைமையில் காலை 9 மணிக்கு துவங்கியது.
மாலை இரண்டு மணி வரை நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் 178 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது புதுப்பித்தும் , புதிய நபர்கள் தங்களுக்கு காதொளி, நடை உபகரணங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து கலந்துகொண்டு அறிந்து கொண்டனர்.
இறுதியாக ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கி அரசு வழங்கும் நலத்திட்ட உதவி குறித்தும் அவர்கள் அதை எவ்வாறு பெறுவது என்பதை விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, சீனிவாசன், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், ஒன்றிய கவுன்சிலர் பரசுராமன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மலர் ராமச்சந்திரன், தம்மனூர் தயாளன் மற்றும் அரசு அலுவலர்கள் என பல கலந்து கொண்டனர்.