காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் கணக்கில் 271 ஏக்கர் நிலம் மாயம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 271 ஏக்கர் நிலம் கணக்கில் மாயமாகியுள்ளதாக தகவல் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் ராயன் குட்டைமேட்டு தெருவை சேர்ந்த டில்லிபாபு என்பவர், தகவல் உரிமை சட்டத்தில் கடந்த 2019 மே மாதம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலுக்கு வருவாய் ஆவணங்களின் படி எத்தனை ஏக்கர் நிலங்கள் உள்ளது? அதன் மதிப்பு என்ன? என்பது குறித்து தகவல் உரிமை சட்டத்தில் கோரியிருந்தார். இதற்கு திருக்கோயில் பொது தகவல் அலுவலர் சார்பில் 448.43 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கூறிய தகவல்கள் பொய்யானவை என கருதி, மீண்டும் 2021 ஆகஸ்ட்16 ம் தேதி தகவல் உரிமை சட்டத்தில் அதே கேள்வியை கேட்டு பதில் கூற அவர் மனு அளித்தார். இதற்கு பதிலளித்த அலுவலர்கள் 177.20 ஏக்கர் நிலம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த டில்லிபாபு, இரு வருடங்களுக்குள்ளேயே சுமார் 271 ஏக்கர் நிலம் குறைவாக உள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிய வரதராஜபெருமாள் திருக்கோயில் தற்போது நில விவகாரத்தில் நிலம் மாயமானது எப்படி என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறைந்தபட்சம் நில வழிகாட்டி மதிப்பின்படி பார்த்தால் கூட பல கோடி மதிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவலை மேற்கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.