Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரத்தில் இதுவரை குற்ற செயல்களில் ஈடுபட்ட 27 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு காரணமாக இதுவரை பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 27 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் தெரிவித்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 27நபர்கள் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாரயம் வழக்கில் 3பேர் , சட்டம் ஒழுங்கு - 15 , குற்றபிண்ணனி - 4 , போதைப்பொருட்கள் - 5 என 27 பேர் மீது இதுவைர நடவடிக்கை பாய்ந்துள்ளது.
கஞ்சா மற்றும் அரசு தடைசெய்த பொருட்கள் விற்பனை செய்ததாக 82 பேர் கைது செய்யபட்டதாகவும் , அவர்களிடமிருந்து சுமார் 6.89லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் தெரிவித்துள்ளார்.