/* */

ஓரிரு நாளில் 2000மருத்துவர்கள் உள்ளிட்ட 10ஆயிரம் நியமனம்

-அமைச்சர் மா.சுப்பிரமணியம்

HIGHLIGHTS

ஓரிரு நாளில் 2000மருத்துவர்கள் உள்ளிட்ட 10ஆயிரம் நியமனம்
X

தமிழக சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார்.

அதன்பின் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதியதாக 350 ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்பு பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவந்த தடுப்பூசி முகாமினை ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள டாக்டர்களிடம் மற்றும் தடுப்பூசி செலுத்த வந்தவரிடம் குறைகளை கேட்டறிந்தார்

இதையடுத்து செய்தியாளரிடம் பேசுகையில் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏற்ப கூடுதல் மருத்துவ படுக்கைகள் ஏற்படுத்தி வந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் 2000 மருத்துவர்கள் 6000 செவிலியர்கள் 2000 தொழில்நுட்பப் பணியாளர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பேர் மருத்துவ பணியில் நியமிக்கப்பட உள்ளனர் என தெரிவித்தார்.

மேலும் 77 இலட்சம் தடுப்பூசிகள் வாங்கப்பட்ட நிலையில் 70 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு 7லட்சம் தற்போது கையிருப்பில் உள்ளதாகவும் , 18 வயதில் இருந்து 45 வயது வந்தவர்களுக்கான தடுப்பூசி முகாம்கள் இன்னும் ஓரிரு நாளில் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு தொழிற்சாலை தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மாற்றுத் திறனாளிகள் என பலருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

சிறுவர்கள் தவிர அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் நோய் தொற்றிலிருந்து தவிர்க்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உறுதி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது ஊரக தொழில் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் , சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் , எழிலரசன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Updated On: 17 May 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  2. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  3. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  4. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  5. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  6. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி
  8. வீடியோ
    அரசுக்கு சாராயத்தை தவிர வேற என்ன வருமானம் இருக்கு !#seeman...
  9. ஆன்மீகம்
    சங்க தமிழ் மூன்றும் தருபவனே, விநாயகா..!
  10. சூலூர்
    கோவை அருகே கருமத்தம்பட்டியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் :3 பேர் கைது